ஆண்டாள் திருப்பாவை 30 பாடல் வரிகள் PDF

Download Now
ஆண்டாள் திருப்பாவை 30 பாடல் வரிகள் PDF
ஆண்டாள் திருப்பாவை 30 பாடல் வரிகள் PDF

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை.

Andal Thiruppavai 30 songs lyrics in Tamil pdf

முன்பு கோகுலத்தில் கோபிகைகள் யாவரும் மார்கழி மாதத்தில் விடியற் காலையிலே எழுந்து, யமுனையில் நீராடி காத்யாயனி தேவியைப் பூஜித்து, ஸ்ரீ கிருஷ்ணன் தங்களுக்குப் புருஷனாக வரவேண்டும் என்று வேண்டினாcகள். அம்மாதிரியே தானும் பகவானையே அடையவேண்டும், என்ற எண்ணத்துடன் ஸ்ரீ ஆண்டாள், தன்னை ஒரு கோபிகையாகவும், மற்றவர்களைத் தோழிகளாகவும் பாவித்துக் கொண்டு முப்பது பாடல்களை இயற்றி உள்ளாள்.

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் 
பன்னு திருப்பாவைப் பல்பதியம்-இன்னிசையால் 
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை, 
பாடி யருளவல்ல பல்வளையாய்,-நாடிநீ 
வேங்கடவற் கென்னை விதி என்ற இம்மாற்றம்
 நாங்கடவா வண்ணமே நல்கு

(பிலஹரி ராகம்- அட தாளம் )

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர் !
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் ! 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோசை இளஞ்சிங்கம் 
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.||1||

(பந்துவராளி ராகம் - ஆதி தாளம்)

வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச் 
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி 
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்; 
செய்யா தனசெய்யோம். தீக்குறளை சென்றோதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
 உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.||2||

(பந்துவராளி ராகம் - திரிபுடை தாளம் )

 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி 
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
 தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து 
ஓங்கு பெருங்செந்நெ லூடு கயலுகளப்
 பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் 
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
 வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
 நீங்காத செல்வம் நிறைந்தேலொ ரெம்பாவாய்.||3||

Also read - karthika puranam tamil chapter 18

 (காம்போதி ராகம் -ஆதி தாளம் )

 ஆழி மழைக்கண்ணா! ஒன்றநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி:
 ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப் 
பாழியம் தோறுடைப் பற்பநா பன்கையில்
 ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து, 
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்,
 வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
 மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்||4||

 (தோடி ராகம் - ரூபக தாளம்)

 மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
 தூய பெருநீர் யமுனைத் துறைவனை 
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
 தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
 தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது 
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
 போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
 தீயினில் தூசாகும்; செப்பேலோ ரெம்பாவாய்||5||

(பூபாள ராகம் ஆதி தாளம்)

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் ரெம்பாவாய்||6||

(பூபாள ராகம் ரூபக தாளம்)

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோர் ரெம்பாவாய்||7||

(பூபனை ராகம் - ஆதி தாளம்)

கீழ்வானம் வெல்ரென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பில்லைகளும் 
போவாபோகின்றரைப் போகாமல் காத்து உன்னைக்
 கூவுவான் வந்துநின்றேம்; கோது குலமுடைய 
பாவாய்! எழுந்திராம்; பாடிப் பறைகொண்டு
 மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநம் சேவித்தால்,  
ஆவாவென் ஞராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.||8||

 (மோகன ராகம் - ஆதி தாளம் )

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தாயம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் 
ம மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்: 
மாமீர் அவைேன யெழுப்பீரோ? உம் மகள்தான்
 ஊமையோ? அன்றிச் செவிடோரி அனந்தலோ 
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ ? 
மாமாயன் மாதவன் வைகுந்த' னென்றென்று 
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.||9||

 (அஸாவேரி ராகம் -ஆதி தாளம்)]

 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
 மாற்றமும் தாராரோ, வாசல் திறவாதார்?
 நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் 
போற்றப் பறைதரும் புண்ணியனால்; பண்டொருநாள்
 கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் 
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? 
ஆற்ற அனந்த லுடையாய் ! அருங்கலமே!
 தேற்றமாய வந்து திறவேலோ ரெம்பாவாய்||10||

(ஸஹாநா ராகம் - திரிபுடை தாளம்)

 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து, 
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
 குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
 புற்றர வல்குல் புனமயிலே போதராய்
 சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின் 
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட,
 சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
 எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்||11||.

 (கேதார கௌள ராகம - ஆதி தாளம் ) 

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால்சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் ரெம்பாவாய் ||12||

Also read - Damodar Ashtakam PDF / ஸ்ரீ தாமோதராஷ்டகம்

 (அடாணா ராகம் - ரூபக தாளம் ) 

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
 கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் 
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் ;
 வெள்ளி யெழுத்து வியாழ முறங்கிற்று
:புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய் 
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே 
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
 கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.||13||

 [ஸராங்க ராகம் - ஆதி தாளம்]

 உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
 செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின 
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
 தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்  போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய்! 
எழுந்திராய் நாணாதாய் ! நாவுடையாய்! 
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்|| 14|| 

 (ஸௌராஷ்ட்ர ராகம் - அட தாளம்)

 எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ? 
சில்லென் றழையேன்மின், நங்கைமீர் போதர்கின்றேன்
 வல்லைஉன் கட்டுரைகள், பண்டேஉன் வாயறிதும் 
வல்லீர்கள் நீங்களே, நானேதா னாயிடுக
 ஒல்லைநீ போதாய்; உனக்கென்ன வேறுடையை? 
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந் தெண்ணிக்கொள் 
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
 வல்லனை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்||15||

(யமுனா கல்யாணி ராகம் - ஆதி தாளம் )

 நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
 கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
 வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ;
 ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
 மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தாள்
 தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
 வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! .
நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்||16||


 (யமுனா கல்யாணி ராகம - ரூபக தாளம் )

 அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் 
நந்தகோ பாலா எழுந்திராய்
 கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! 
குலவிளக்கே எம்பெரு மாட்டி! யசோதாய் அறிவுருய் ; 
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த உம்பர்கோ மானே!
 உறங்காது எழுந்திராய்! 
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
 உம்பியும் நீயும் உறங்ககேலோ ரெம்பாவாய்||17||. 

 (ஸாவேரி ராகம் - ஆதி தாளம் )

 உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
 நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
 கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய் ; 
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
 பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்;
 பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச் 
செந்தா மரைக்கையால் சீரார் வளை யொலிப்ப
 வந்து திறவாய், மகிழ்நதேலோ ரெம்பாவாய்.||18||

 (ஸ்ரீராகம்-ஆதி தாளம்)

 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் 
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் லேலேறிக்
 கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
 வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்; 
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணானை 
எத்தனை போதும் துயில் எழ ஓட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்.||19||

 (தேசி ராகம்-ஆதி தாளம் )

 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று 
கப்பம் தவிர்க்கும் கலியே ! துயிலெழாய்!
 செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
 வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
 செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
 நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் 
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை 
இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய். ||20||

Also read - Avani Avittam Tamil / பூணூல் உணர்த்துவது, வரலாறு

 (காம்போதி ராகம் ஆதி தாளம் ) 

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதனிப்ப
 மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
 ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ; 
ஊற்ற முடையாய்! பெரியாய் ! உலகினில்
 தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
 மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
 ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே 
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாரெம்பாவய்||21||

 (பைரவி ராகம்-ஆதி தாளம் )

 அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான 
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
 சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்; 
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே 
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? 
திங்களும ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்க ணிரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய் || 22||

 (அடாணா ராகம்-ஆதி தாளம்)

 மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் 
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து 
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி 
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
 போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
 கோயில்நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
 சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
 காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்||23||.

[பியாகடை ராகம் -ஆதி தாளம்)

 அன்றிவ் வுலகம அளந்தாய் ! அடிபோற்றி !
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் ! திறல்போற்றி !
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
 கன்று குணிலா எறிந்தாய் ! கழல்போற்றி, 
குன்று குடையா எடுத்தாய் ! குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும நின்கையில் வேல்போற்றி 
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் 
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோ ரெம்பாவாய்.||24||

 [சங்கராபரண ராகம் - ஆதி தாளம் )

 ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில்
 ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
 தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த 
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
 நெருப்பென்ன நின்ற நெடுமாலே ! உன்னை 
அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் 
திருத்தக்க செல்வமும் சேகவமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.||25||

 (ஆரபி ராகம்-ஆதி தாளம் )

 மாலே! மணிவண்ணா ! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்
 ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
 பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே 
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே ; 
சாலப் பெரும்பறையே, பல்லாண் டிசைப்பாரே,
 கோல விளக்கே, கொடியே, விதானமே, 
 ஆலின் இலையாய் ! அருளேலோ ரெம்பாவாய்.||26||

 (ஆநந்தபைரவி ராகம் - ஆதி தாளம்)

 கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா ! உன்தன்னைப் 
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;
 நாடு புகழும் பரிசினால் நன்றாகச் 
சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே,
 பாடகமே, என்றனைய பல்கலனும் யாமணிவோம்;
 ஆடை யுடுப்போம்; அதன்பின்னே பாற்சோற
 மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.||27||

 (தந்யாசி ராகம் - ஆதி தாளம் )

 கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்; 
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
 பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்; 
குறைவொன்று மில்லாத கோவிந்தா ! உன்தன்னோடு
 உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது;
 அறியாத பிள்ளைகளோம். அன்பினால் உன்தன்னைச் 
சிறுபே ரழைத்தனவும் சீறி யருளாதே, 
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.||28||

 [கல்யாணி ராகம்-ஆதி தாளம்)

 சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன் 
பொற்றா மரையடியே போற்று பொருள்கேளாய்;
 பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்துநீ 
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
 இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு 
உற்றோமே யாவோம்; உனக்கேநாம் ஆட்செய்வோம் ; 
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.||29||

 (சுருட்டி ராகம் - ரூபக தாளம் )

 வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை,
 திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி 
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைப் 
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே 
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் 
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய் ||30||

திருப்பாவை முற்றிற்று

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளை சரணம்

திருப்பல்லாண்டு

 பல்லாண்டு பல்லாண்டு 
பல்லாயிரத்தாண்டு  பல கோடி நூறாயிரம்
 மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா ! 
உன் சேவடி செவ்வி திருக்காப்பு || 1.1.1 ||

 அடியோமோடும் நின்னோடும் 
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 
வடிவாய் நின் வல மார்பினில்
  வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு 
 படை போர் புக்கு முழங்கும் 
அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே || 1.1.2 ||

****************************************************************************** 


Post a Comment

2 Comments