Avani Avittam Tamil / பூணூல் உணர்த்துவது, வரலாறு

ஆவணி அவிட்டம் பூணூல் பண்டிகை 

Avani Avittam
Avani Avittam


காயத்ரி மந்திரம் 

ஓம் பூர் புவஸ் ஸுவஹ தத்ஸ விதுர்விரண்யம் -
 பர்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோநாம ப்ரசோதயாத்!!
Avani Avittam Tamil  பூணூல் உணர்த்துவது, வரலாறு
Avani Avittam Tamil  பூணூல் உணர்த்துவது, வரலாறு

 காயத்ரி மந்திரத்தில் 9 பெயர்கள் உள்ளன . 

  1.  ஓம் ,
  2.  பூர் , 
  3.  புவஹ 
  4.  சுவஹ . 
  5.  தத் 
  6. சவிதர்
  7. வரேண்யம் ,
  8. பர்க்கோ 
  9. தேவஸ்ய

 எனும் 9 பெயர்களால் இறைவன் புகழப்படுகிறார். 

"தீமஹி " என்பது இறைவழிபாடு 

, தியோயோனப் பிரசோதயாத் " என்பது பிராத்தனை .

 "ஓம்" என்பது முதல் நிறுத்தம் ,

 "பூர்வ புவஸ் ஸுவ" என்பது 2 வது நிறுத்தம் 

 "தத்சவிதுர் வரேனியம் " என்பது 3 வறு நிறுத்தம் . 

"பர்க்கோ தேவஸ்ய தீமஹி " என்பது 4 வது நிறுத்தம் . " 

"தியோயோனப் பிரசோதயாத்"  என்பது 5 வது நிறுத்தம் .

இந்த மந்திரத்தை ஜபம் செய்யும் போது ஒவ்வொரு நிறுத்தத்திலும் சற்றே நிறுத்தி மேற்கொண்டு சொல்லவும் , எல்லோருக்கும் பொதுவானதாக அமையவே "காயத்ரி மந்திரம் " ஏற்படுத்தியுள்ளார்.

you may also refer  Gayathri manthra's various god click here  

காயத்ரி மந்திரம் ஒரு பெருஞ்செல்வம் , இதை காலையில் , மாலையில் , இரவு படுக்கும் பொழுது , பிரயாணம் செய்யும் பொழுது , சாப்பிடும் முன் எப்போது வேண்டுமென்றாலும் சொல்லலாம் .

பூணூல் பண்டிகை /ஆவணி அவிட்டம் 

சுக்லாம் பரதரம் , ஆசமனம் , ப்ராணாயாமம் , சங்கல்பம் செய்த பிறகு 

யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய , பரப்ரஹ்ம ரிஷி -
 திருஷ்டுப் சந்த ; பரமாத்மா தேவதா - ப்ரஹ்ம தேஜாபீ 
விருத்யர்த்தம் யக்ஞோபவீத தாரணே விநியோக : 

என்று நீயாஸம் செய்து பூணூலின் முடி வலதுகை உள்ளங்கை ஆகாசத்தையும் , இடது உள்ளங்கை பூமியை பார்க்கும் படிவைத்துக் கொண்டு பின்வரும் மந்திரத்தை சொல்லி போட்டுக் கொள்ளவும் .

"யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் 
  ப்ரஜாபதே ; யத் புரஸ்தாத் ! 
  ஆயுஸ்ய மக்ரியம் ப்ரதிமுஞ்ச ஸுப்ரம் 
  யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ : !!"

 பிறகு ஆசமனம் செய்தகீழ்க்கண்ட படி சொல்லி பழைய பூணூலை கழற்றவும்.

 உபவீதம் பிந்நந்தும் ஜீர்ணம் கச்மல தூஷிதம் 
விஸ்ருஜாமி புனர்ப்ரஹ்மத வர்ச்சே , தீர்காயு ரஸ்துமே . 

பிறகு ஆசமனம் செய்யவும்.

பூணூல் பண்டிகைக்கு வேண்டியது

ஆவணி அவிட்டத்திற்கும் எல்லாப் பண்டிகைக்கு எடுத்துப் போவது போல் எடுத்துக் கொண்டும் , அத்துடன் நவரிஷிகளை ஆவாஹணம் செய்ய 9 கற்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும் . நைவேத்தியத்திற்கு சத்து மாவு செய்ய வேண்டும். அதாவது அரிசி மாவு அல்லது பொட்டுக்கடலை மாவில் நெய் காய்ச்சி ஊற்றவும் . இடித்த சர்க்கரை , வெள்ளரி விதை , எள் , முந்தரி வறுத்துப் போடவும் , ஏலக்காய் மற்றும் நெல் , பொரி கொஞ்சம் போட வேண்டும் , ( அன்று ஆண்கள் எண்ணை ஸ்நானம் செய்யவும் . வடை  பாயாஸத்துடன் போஜனம் செய்யவும் )

ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும் - ekadasi vratham in tamil

யக்ஞோபவீதம் / பூணூல் உணர்த்துவது

காயத்ரி மந்தரத்தைச் சொல்லி மனதைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டிய கடமையை ஞாபகப்படுத்துவதே யக்ஞோபவீதம் என்னும் பூணூல் ஆகும். பூணூலில் 3 பிரி நூல்கள் உள்ளன

  •  பிரம்மா 
  •  விஷ்னு 
  •  சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் ,
  •  ஸரஸ்வதி ,
  •  லக்ஷிமி ,
  •  பார்வதி , ஆகிய மூன்று தேவிகளையும் , 
  •  ஸத்வ ,
  •  ரஜஸ் ,
  •  தமஸ்.முக்குணங்களையும் , 
  • இறந்த காலம் ,
  •  நிகழ்காலம் , 
  • எதிர்காலம் ஆகிய முக்காலங்களையும் ,

  • விழிப்பு ,
  • கனவு ,
  • அமைதி ஆகிய 3 நிலைகளையும்
  •  நாம் அனுபவிக்க வேண்டிய பூமி ,
  •  சுவர்க்கம் 
  • ,நரகம் ஆகியவற்றையும் பூணூல் உணர்த்துகிறது .

இதில் உள்ள பிரம்ம முடிச்சு பிரம்மத்தை உணர்த்துவதுடன் உடம்பைத் தீய சக்திகளிலிருந்து காப்பாற்றும் . இத , பிங்கள , சூக்ஷ்ம நாடிகளின் மூலம் குண்டலினி சக்தி பரவி பிராண சக்தியை நாம் உணர இம்மூன்று நூல்கள் வழி காட்டுகின்றன . தான் என்ற கர்வத்தைத் துறந்து யக்ஞம் செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் பொறுப்பைச் செய்வதால் இதற்கு  யக்ஞோபவீதம் என்று பெயர் ஏற்பட்டது . 

பூணூல் வரலாறு

 நீர்மின் சக்தியின் அதிஷ்டான தெய்வம் மகாவிஷ்னு அதாவது விஷ்ணு - குளிர்ச்சி ( நீர் ) , அனல் மின் சக்தியின் அதிஷ்டான தெய்வம் சிவபெருமான் அதாவது சிவம் - சூடு ( அனல் ) இதன் விளக்கங்களை ( ஓம் நமோ நாராயணா , நமசிவாய எனும் ) எட்டெழுத்து மந்திரங்களிலும் , ஐந்தெழுத்து மந்திரங்களிலும் காணலாம் . இம்மகா மந்திரங்களைத் தொடர்ந்து ஜபிக்க நம் உள்ளத்தில் உள்ள தஹராகாசத்தில் அந்தர்யாமி என்ற டைனமோ யந்திரத்தினால் நம்மிடம் ஒப்பற்ற தேஜஸ் ஓங்குகிறது . இதை வீணாகாமல் பாதுகாப்பவை பிரம்ம முடிச்சுடன் கூடிய யக்ஞோப வீதங்களாகும் . எனவே ஆடவர்கள் கண்டிப்பாக அணிவது சிறந்தது.

ஆவணி அவிட்டத்தின் முக்கியத்துவம்

எனவே மகாவிஷ்ணு ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிய வேதங்களை மீட்டுக் கொடுத்த நாள் தான் ஆவணி அவிட்டம் என்று கூறப்படுகிறது. இந்த நாளன்று மகா விஷ்ணு மீட்ட வேதத்தை படிப்பதன் மூலம் புதிய தொடக்கத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆவணி அவிட்ட நாள் அன்று தான் வேதங்களை படிக்கத் தொடங்கினார்கள்..


🙏🙏🙏🙏🙏

சுபம்

Post a Comment

2 Comments