ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை lyrics
LALITHA NAVARATHNA MALAI |
ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரு சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்
காப்பு
ஆக்கும் தொழில்ஐந் தரனாற் றநலம்
பூக்கும் நகையாள் புவனேஸ் வரிபால்
சேர்க்கும் நவரத் தினமா லையினைக்
காக்கும் கணநா யகவா ரணமே!
1.வைரம்
கற்றும் தெளியார் காடேகதியாய்
கண்மூடி நெடுங் கணவான தவம்
பெற்றும் தெரியார் நினையென் னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க் கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
2. நீலம்
மூலக் கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
3.முத்து
முத்தே வரும்முத் தொழிலாற் றிடவே
முன்னின் றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந் தநிவா சினியே சரணம்
தத்தே றியநான் தனயன் தாய் நீ
சாகா தவரம் தரவே வருவாய்
மத்தே றுதத்திக் கிணைவாழ் வுடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
4.பவளம்
அன்னை நடனம் செய்யும் ஆனந்தமேடை
சிந்தை நிம் பவளம் பொழிபாரோர்
தேம்பொழி லாமிது செய்தவ ளாரோ
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
5. மாணிக்கம்
கருதக் கிடையாக் கலையா னவளே
புனையக் கிடையாப் புதுமைத் தவளே
நாணித் திருநா மமும்நின் துதியும்
நவிலா தவரை நாடா தவளே
மாணிக் கஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
6. மரகதம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுருதிஜதி லயமே இசையே சரணம்
அரஹர சிவஎன் றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
7. கோமேதகம்
பொன்றாப் பயனும் குன்றா வரமும்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமே தகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர்கோ கிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
8. பத்மராகம்
ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராகவி காஸவி யாபினி அம்பா
சஞ்சல ரோகநி வாரணி வாணீ
சாம்பவி சந்த்ரக லாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்திய கல்யாணி
மஞ்சுள மேரு ச்ருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
9. வைடூரியம்
வலையொத் தவினை கலையொத்த மனம்
மருளப் பறையா றொலியொத் தவிதால்
நிலையற் றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலைவற் றசைவற் றநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத் துவசன் மகளே வருவாய்
0 Comments