Sree Meenakshi Anthathi lyrics in tamil pdf download - ஸ்ரீ மீனாட்சி அந்தாதி தமிழில் pdf

அந்தாதியின் பொருள் / அந்தாதி என்றால் என்ன?

அந்தமும் ஆதியும்.
அந்தம்- கடைசி எழுத்து, வார்த்தை, சீர்
ஆதி- முதல் எழுத்து, வார்த்தை, சீர்
தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான சிற்றிலக்கியங்கள் 96ல் அந்தாதியும் ஒன்று.
ஒரு பாட்டின், முதல் அடியின் கடைசி சீரும் இரண்டாம் அடியின் முதல் சீரும் ஒன்றி வருவதே அந்தாதி.
நாம் பார்க்கப்போவது ஸ்ரீமீனாட்சி அந்தாதி

ஸ்ரீ மீனாட்சி அந்தாதி

Sree Meenakshi Anthathi lyrics in tamil pdf download
Sree Meenakshi Anthathi lyrics in tamil pdf download

To Download this ஸ்ரீ மீனாட்சி அந்தாதி தமிழில் pdf click here

Download Now

காப்பு 

நேரிசை வெண்பா 

சேராத செல்வமெலாஞ் சேர்க்கும் திருவ னைய 
ஆராத இன்பம் அருள்புரியும் - தீராத 
பொய்த் திரளாம் துன்ப னைத்தும் போக்கும் புகழ்கூடல் 
சித்தி விநாயகனைச் சேர் !

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம் - தெரிந்து கொள்ளவேண்டிய ஐந்து

நூல் 

நேரிசை வெண்பா 

1.அணிசேர் மதுரையுறை அம்மைமீனாட்சி ! 
பணிசேரும் சுந்தரனார் பன்னீர் - தனியா 
வினைசேரும் ஈனர் விளைக்குமிடர் தீர்த்தாள் 
உனைச் சேர்ந்தார்க் கேதுகுறை யோது . 

2. ஓதுந் தமிழ்ப்பரிவால் உன்னடியைப் போற்றுகின்றேன் 
தீதும் நலமும்நின் சேடிவக்கே - ஏதுமிலேன் 
நண்ணார் புரியும் நலிவகற்றி யாண்டருள்செய் 
தண்ணார்மீனாட்சி ! சரண் 

3. சரணடைந்தார் தம்மையிட்டர் சாராமல் காப்பாய் 
கரணமெலாம் நின்வசமே கண்டாய் - தருணமதில் 
நாயே யனையார்செய் தீங்தனைத் தீர்த்தருள்செய் 
தாயேமீனாட்சிநலந் தா . 

4. தாவென்று மற்றோர்பால் சாரேன் நினைச்சார்ந்தேன் 
ஓவென்று நானழுதல் ஒண்ணுமோ - பாவொன்றும் 
கூடல் மதுரையிறை கூடுமீனாட்சியே 
ஆடலர சுக்கரசி யாள் .

5. ஆளாது நீயிருந்தால் ஆர்துணைவர் ? நாயேன் சொல் 
கேளா திருப்பதுநற் கேண்மையோ ? - வாளா 
இருத்தல் கருணைக் கிழுக்கன்றோ ? கூடல் 
திருத்தமீ னாட்சியே செப்பு 

6. செப்புங் குறைகளெலாம் தீரும் நினைக்கண்டால் 
ஒப்புவமை யில்லா உமையவளே ! - பொய்ப்புல்லர் 
செய்யும் இடர்களையாய் தேவிமீ னாட்சியே ! 
எய்யும்வகைச் செய்யேல் இனி . 

7. இனித்த மதுரமொழி எங்கள் மீனாட்சியே 
பனித்த சடைமுடியோன் பங்கில் - தனித்துறையும் 
அம்மையே ! ஞானத்தின் ஆரணங்கே ! ஈனர்செய் 
வெம்மைதீர்த் தோர்சொல் விளம்பு 

8. விளம்பும் மறைபோற்றும் மீனாட்சி யம்மே ! 
உளம்புண்ணாய் நாயேன் உலைந்தேன் - இளம்புதல்வன் 
துன்பங் களைந்தருள்வாய் தூயசிற் சக்தியே ! 
இன்பவடி வாம் அன்னையே !

9. அன்னை யெனவுன்னை அடைந்தேன் அறிவில்லார் 
என்னையிடர் செய்கின்றார் என்செய்தேன் ? முன்னைவினை 
தீர்த்தாள் திருக்கூடல் தேவிமீனாட்சி ! கண் 
பார்த்தாள்வந் தேன்நின் பதம் . 

10. பதமலரைச் சேர்ந்தென் பாவைமீ னாட்சி ! 
நிதமுனது தாளை நினைந்தேன் - இதமில் 
கொடியார் புரியமிடர்க் கோதகற்றி நின்தாள் 
அடியேன் தலைமீ தணி .

Post a Comment

0 Comments