திருவெம்பாவை பாடல்கள் 20 வரிகள் pdf \ Thiruvempaavai 20 padalgal pdf

Download Now

Thiruvempaavai padalgal
Thiruvempaavai Padalgal

 திருச்சிற்றம்பலம்

திருவெம்பாவை ஆசிரியர்?

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள்.

 ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை பாடல் வரிகள்:-

திருவெம்பாவை

 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் 
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் 
மாதே! வளருதியோ ? வன்செவியோ நின்செவிதான் ? 
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி 
வீதிவாய்க் கேட்டலுமே, விம்மிவிம்மி, மெய்ம்மறந்து 
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன் 
ஏதேனும் ஆகாள், கிடந்தாள் ; என் னே! என்னே ! 
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்||1||

 பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
 பேசும்போது எப்போதுஇப் போதார் அமளிக்கே 
நேசமும் வைத்தனையோ? 
நேரிழையாய் ! நேரிழையீர் 
 சீசி ! இவையுஞ் சிலவோ? விளையாடி 
ஏ சு மிடம்ஈதோ ? விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும் 
தேசன், சிவலோகன், தில்லைச்சிற் றம்பலத்துள் 
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்||2||

 முத்தன்ன வெண்ணகையாய் ! முன்வந் தெதிரெழுந்தென் 
அத்தன், ஆனந்தன், அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்துன் கடைதிறவாய்,
 பத்துடையீர்! ஈசன் பழஅடியீர்! பாங்குடையீர்!
 புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ ? 
எத்தோநின் அன்புடைமை ? எல்லோ மறியோமோ ?
 சித்தம் அழகியார் பாடாரே நம்சிவனை?
 இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்||3||

click here to view Shivapuranam

 ஒண்ணித் திலநகையாய் ! இன்னம் புலர்ந்தின்றோ ?
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ ?
 எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் 
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
 விண்ணுக் கொருமருத்தை, வேத விழுப்பொருளைக்
  கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
 உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம்; நீயேவந் 
தெண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்||4||

 மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
 போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் 
பாலூறு தேன்வாய்ப் படிறீ ! கடைதிறவாய்
 ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
 கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும் 
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
 ஓலமிடினு முணராய், உணராய்காண்
 ஏலக் குழலீ பரிசேலோ ரெம்பாவாய்||5||

மானே நீ நென்னலை நாய்வந் துங்களை 
நானே யெழுப்புவன் என்றலும் நாளுமே
 போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ 
வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் 
தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி
 வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறுமெமக்கும்
ஏனோர்க்குத் தங்கோபை பாடேலோர் எம்பாவாய்||6||

 அன்னே இவையுஞ் சிலவோ? பலவமரர் 
உன்னற் கரியா னொருவன் இருஞ்சீரான்
 சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
 தென்னாஎன் னாமுன்னந் தீசேர்மெழு கொப்பாய் ; 
என்னானை என்னரையன் இன்னமுதென் 
றெல்லோமும் சொன்னோங்கேள், 
வெவ்வேறாய்: இன்னந் துமிறுதியோ ; 
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் ;
 என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்||7||

click here to view vaithiyanadha askatam

 கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ;
 ஏழி லியம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் ; 
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை 
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
 வாழியீ தென்ன வுறக்கமோ? வாய்திறவாய் !
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ?
 ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
 ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்|| 8||

 முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! 
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே !
 உன்னைப் பிரானாகப் பெற்றவுள் சீரடியோம்
 உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் 
அன்னரே எங்கணவ ராவார்; அவருகந்து 
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் ;
 இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்,
 என்ன குறையு மிலோமேலோர் எம்பாவாய்|| 9||

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் 
கையாற் குடைந்து குடைந்துள் கழல்பாடி, 
ஐயா! வழியடியோம் வாழ்த்தோங்காண் ஆரழல்போற்
 செய்யா! வெண்ணீரு ! செல்வா! சிறுமருங்கும்
 மையார் தடங்கண் மடந்தை மணவாளா! 
ஐயா ! நீ ஆட்கொண் டருளும் விளையாட்டில்
 உய்வார்கள் உய்யும வகை யெல்லா முய்ந்தொழிந்தோம்; 
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்||11||

 ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடும்
 தீர்த்தனற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் 
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
 காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி,
 வார்த்தையும் பேசி, வலைசிலம்ப, வார்கலைகள்
 ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப,
 பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்காதம்
 ஏத்தி, இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்||12||

 பைங்குவளைக் கார்மலரால், செங்கமலப் பைம்போதால்,
 அங்கங் குருகினத்தால், பின்னும் அரவத்தால்,
 தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
 எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த 
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
 சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக் 
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
 பங்களப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்|| 13||

காதரர் குழையாடப் பைம்பூண் கலனாடக்
 கோதை குழலாட வண்டின் குழாமாடச் 
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
 வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிக் 
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி 
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் 
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி யாடேலோர் எம்பாவாய்|| 14||
click here to view margabandhu Stothiram

 ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் 
சீரொருகால் வாயோவாள், சித்தங் களிகூர 
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
 பாரொருகால் வந்தனையாள் ; 
விண்ணோரைத் தான் பணியாள் 
பேரரையற் கிங்ஙனே பிததொருவர் ஆமாறும் 
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
 வாருருவப் பூண்முலையீர் ! வாயார நாம்பாடி
 எருருவப் பூம்புனல்பாய்ந தாடேலோர் எம்பாவாய்.||15||

 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
 என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாளிட்டிடையின் 
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல் 
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் 
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
 தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கும்
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
 என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்||16|| 

செங்க ணவன்பால் திசை முகன்பால் தேவர்கள்பால்
 எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
 கொங்குண் கருங்குழலி! நந்தம்மைக் கோதாட்டி
 இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
 செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
 அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை 
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
 பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்||17||

 அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் 
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
 கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் 
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் 
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
 விண்ணாகி மண்ணாசி மித்தனையும் வேருகிக்
 கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
 பெண்ணே ! இப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். ||18|| 

 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
 அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்!
 எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
 எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க :
 கங்குல் பகலெங்கண் மற்றென்றுங் காணற்க
 இங்கி பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
 எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்||19|| 

karthikapuranam day 17 click here

 போற்றி ! அருள்க, நின் ஆதியாம் பாதமலர்
 போற்றி ! அருளுக, நின் அந்தமாம் செந்தளிர்கள்
 போற்றி ! எல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல்லாஉயிர்க்கும் போகமாம்பூங்கழல்கள்
 போற்றி ! எல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள் 
போற்றி! மால் நான் முகனும் காணாத புண்டரிகம் 
போற்றி! யாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலே ரெம்பாவாய்||20||.

 திருச்சிற்றம்பலம்!!! தில்லையம்பலம்!!!

திருவெம்பாவை பாடல்கள் எத்தனை?

திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்கள் கொண்டவை. 

  • முதல் எட்டு பாடல்கள் மகளிர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு எல்லோருமாக இறைவனின் புகழினை பாடியவாறு நீராடச்செல்லுதலையும்,
  •  ஒன்பதாவது பாடலில் தங்களது வேண்டுகோளை இறைவனிடம் வைப்பதையும்,
  • பத்தாவது பாடலில் இறைவனைப் புகழ்ந்து பாடும் தன்மையைகேட்டு அறிவதையும் உணர்த்துகின்றன.
  • அடுத்த பத்து பாடல்கள் அனைவரும் சேர்ந்து நீராடுதலை உணர்த்துவதாகவும் அமைந்துள்ள பாடல்கள்.

Post a Comment

0 Comments