விதுர நீதி தமிழில் pdf download - யார் மூடர்?

விதுர நீதி - யார் மூடர்?

விதுர நீதி தமிழில் pdf download - யார் மூடர்
விதுர நீதி தமிழில் - யார் மூடர்?

எந்த காலத்துக்கும் பொருந்தும் படியாக விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு மஹா பாரதத்தில் விதுரர் மூலம் சொல்லப் பட்டுள்ளது இது உறங்காமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு கூறப் பட்டிருந்தாலும் எல்லோரும் கேட்டு பயனடையுமாறு வியாச மகரிஷியால் நமக்கு அருளப் பட்டது நமது பெரும் பாக்கியம்.
வியாச மகரிஷி -விதுர நீதி
வியாச மகரிஷி

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் - தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு மற்றும் எட்டு

அடுத்து மூடன் என்றால் யார் என்று கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.

  1. கேள்விச் செல்வம் இல்லாதவன் அதாவது எதையுமே நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துக் கொள்பவன் நல்லோர்கள், படித்தோர்கள் சொல்வதை கேட்பவனே பண்டிதன் ஆவான்
  2. வீண் ஜம்பம் அடிப்பவன் அதாவது கையில் ஒன்றுமே இல்லாமல் 18 மாடி வீடு கட்டுவேன் என்று ஜம்பம் அடிப்பவன்  மூடன் 
  3. முயற்சி எதுவும் செய்யாமல் தானாக கிடைக்கும் என்று நினைப்பவன் எதையுமே செய்யாமல் நமது அறிவு, திறமையால் தானாகவே எல்லாம் கிடைக்கும் என்று நினைப்பவன் மூடன் ஆவான் 
  4. தனது செயலை விட்டு விட்டு பிரர்த்தியார் செய்யும் தொழிலே நல்லது என்று நினைப்பவன் .அதாவது தான் செய்யும் தொழிலை தாழ்வாக நினைத்து பிறர் செய்யும் தொழில் சிறந்தது என்று நினைப்பவன் மூடன்
  5. நண்பருக்கு உறவினருக்கு துரோகம் நினைப்பவன்
  6. தன்னை விட பலசாலியை பகைவனாக நினைப்பவன் அதாவதுதன்னை விட பலம் மிகவும் அதிகமாக உள்ளவனிடம் யுத்தம் செய்ய நினைப்பவன் மூடன் ஆவான். 
  7. எதிலும் சந்தேகம் கொள்பவன் தேவையற்ற சந்தேகத்தை கொள்ளாதவனே அறிவுள்ளவன் ஆவான் 
  8. சீக்கிரம் செய்ய வேண்டிய காரியத்தை தள்ளி போட்டுக்கொண்டேஇருப்பவன் எந்த காரியத்தையும் அந்தந்த நேரத்தில் முடிப்பதே புத்திசாலிதனமாகும் நேரம் தவறி செய்யும் காரியங்கள் அந்த காலத்திற்கு ஒப்பாமல் பயனற்று போகும்
  9. தெய்வங்களுக்கு பூஜை அர்ச்சனை மற்றும் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யாதவன் 
  10. அழையாமல் வருபவன் மற்றும் பேசுபவன்
  11. பிறர் குற்றத்தை பற்றி பேசுபவன், - அதாவது தான் மீது உள்ள சீற்றங்களை பற்றி நினைக்காமல் பிறர் பற்றி குற்றம் பேசுபவன் சாஸ்திரம் படி மூன்று பேருக்குத்தான் குற்றத்தை கேட்கும் அதிகாரம் உண்டு பகவான், மகாலட்சுமி தாயார், மற்றும் தரும தேவதை தங்களுக்கு இடப் பட்ட வேலையை மட்டும் செய்பவனே அறிவுள்ளவன் ஆவான் 
  12. தன்னால் எதுவம் செய்யமுடியாது என்று தெரிந்தும் கோபித்து கொள்பவன், அதாவது கையாலாகதவன் கோபித்துக் கொள்வது அர்த்தமே இல்லை. பேசாமல் இருப்பதே நல்லது மேலே சொல்லப் பட்ட விஷயங்களில் இருந்து நமக்கு மூடனுக்கு உள்ள குணங்கள் எதாவது தவறி நம்மிடம் உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம்.

பாண்டவர்களிடம் தூது போய் வருமாறு திருதராஷ்டிரன் சஞ்சயன் ஐ அனுப்பி வைக்கிறான் சஞ்சயன் தூது போய் வந்து இரவு நேரம் ஆகி விட்ட படியால் காலையில் விவரம் சொல்வதாக கூறி சென்று விடுகிறாய் பிறகு தூக்கம் வராமல் திருதராஷ்டிரன் தவிக்கிறான். எனவே விதுரரை அழைத்தனுப்பி உபதேசம் கேட்கிறேன் மன உளைச்சல் தாங்காமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கும் நாட்டுக்கும் நல்லது நடக்க போகுது என்று மேலும் தனது உபதேசங்களை தொடர்கிறார்.

ஒருவனுக்கு பக்தி வர வேண்டுமானால் கீழ் கண்ட ஏழு குணங்களும் சாதனங்களும் இருந்தாக வேண்டும் என்று கூறுகிறார்:

  1. தேக சுத்தி - உடம்பு சுத்தமாக இருக்க வேண்டும் உடம்பு சுத்தம் என்றால் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும் என்பது இல்லை ஆகார சுத்தம் வேண்டும் அதாவது சத்துவ குணங்கள் வளர்க்கும் உணவுகள்உட்கொள்ள வேண்டும் தமோ குணம் மற்றும் ரஜோ குணங்களை வளர்க்கும் உணவுகளை உட்கொண்டால் பக்தி வராது.
  2. அதீத ஆசை கூடாது காண்பது, கேட்பது, உண்பது போன்ற அனைத்து விஷயங்களிலும் மிக அதிகமான ஆசை கூடாது.
  3. அப்பியாசம் திரும்ப திரும்ப செய்யும் சக்தி, அதாவது பகவானின் திருமேனியை நினைத்து, நினைத்து மனதில் நிறுத்த வேண்டும். பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ர நாமம் போன்றவற்றை திரும்ப திரும்ப அலுப்பு தட்டாமல் படிக்கும் சக்தி, பெரியோர்களிடம் இவற்றை திரும்ப திரும்ப கேட்கும் சக்தி வேண்டும்.
  4. கிரியா - கிரஹச்திணர் அனைவரும் பஞ்ச மஹா யக்கியம் தினமும் செய்ய வேண்டும் வீட்டில் பஞ்ச சோ சூனைகள் என்ற ஐந்து தோஷங்கள் உண்டு அம்மி, உரல் மற்றும் உலக்கை, ஜல பாத்திரம் விளக்குமாறு, அடுப்பு என்ற ஐந்து இடங்களிலும் தினமும் நம்மை அறியாமல் பிராணி வதை நடை பெரும் எனவே ஐந்து தோஷங்களால் பாவம் வந்து சேரும் அந்த பாபங்களில் இருந்து விடுபட பிரம்ம யக்கியம், தேவ யக்கியம் ரிஷி யக்கியம், மனுஷ யக்கியம் மற்றும் பூத யக்கியம் செய்ய வேண்டும் யக்கியம் என்றால் பெரிய காரியம் ஒன்றும் அல்ல. பூ சந்தனம் கொண்டு வழி பட்டாய் தேவ மற்றும் பிரம்ம யக்கியம் ஆகும் வேதம் சொன்னால் ரிஷி யக்கியம் ஆகும். விருந்தினரை உபசரித்தால் மனுஷ யக்கியம் ஆகும் மற்றும் வாசலுக்கு வரும் பிராணிக்கு உணவு இட்டால் பூத யக்கியம் ஆகும் இவற்றை தினமும் செய்ய வேண்டும்.
  5. நல்ல குணங்கள் இருக்க வேண்டும் - அதாவது தயா இருக்க வேண்டும் இல்லாதவனை பார்த்தல் கொடுக்க வேண்டும் என்ற தயை வர வேண்டும் எப்போதும் சத்யம் சொல்ல வேண்டும்.
  6. அதிக துன்பம் கூடாது தேச, கால மாறுபட்டினால் வருத்தப் படாமல் இருக்க வேண்டும் அதாவது வேறு இடம் சென்று விட்டால் அங்கு ஏற்படும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும் தட்ப வெப்ப மாறுபாட்டை தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும். தண்ணீர், ஆகார மாறுபாட்டினால் துன்பப்பட கூடாது.
  7. அதிக மகிழ்ச்சி கூடாது - நமக்கு சுகம் தரும் விஷயங்கள் நடந்தாய் அதற்காக அதிக மகிழ்ச்சி கூடாது.

ஆக மேல் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் இருந்தால் மட்டுமே நமக்கு பக்தி வரும் என்றும் இந்த எழு படிக்கட்டுகளையும் நாம் தாண்ட வேண்டும் என்றும் விதுரர் விவரிக்கிறார்.

எந்த ஒன்றுகளை பற்ற வேண்டும், எந்த ஒன்றுகளை விட வேண்டும்

விதுர நீதி பற்றிய கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள் பின் வரும் நாட்களில் இதுபோன்ற வாழ்க்கை தத்துவ தொடர்களை தொடர்ந்து உங்களுக்கு பதிவு செய்ய உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு மிக முக்கியம்


Post a Comment

0 Comments